பழைய ஓய்வூதிய திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

1. கடன்

“பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம்.  அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. பங்களிப்பு பென்சன் திட்டத்தில் அந்த வசதி கிடையாது”

2. பென்சன்

“பணி ஓய்வுபெற்ற பிறகு, நாம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். 

2. பென்சன்

பங்களிப்பு பென்சன் திட்டத்தில் நமக்கு பணத்தை கொடுத்துவிட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது”

3. குடும்ப பென்சன்

“ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்”

4. மற்ற பென்சன்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.

5. வருங்கால வைப்பு நிதி

பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, 

5. வருங்கால வைப்பு நிதி

பணிக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை , பணி ஓய்வு பணிக் கொடை ஆகியவை கிடைக்கும்.

6. பணியின்போது இறந்தால்

அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 

6. பணியின்போது இறந்தால்

7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.

7. கூடுதல் ஓய்வூதியம்

80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும். இந்த பணம் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைக்காது.